Monday 25 May 2009

வீரவணக்கங்கள்...

Email லில் ஒரு நண்பர் அனுப்பியது.

வேலுப்பிள்ளை
அவர்களின்
விடிவெள்ளி...
எங்கள்
அண்ணன்
பிரபாகரனே...

உன்னொருவனின்
வீர மரணத்துக்கும்...
உன்னோடு
சகலங்களிலும்
உடனிருந்து
உயிர்
துறந்த...
என்னுடைய
பச்சை
தமிழ்
ரத்தங்களே...


உங்களுக்கு
இந்த கையாலகாத
கடன்கார தமிழனின்
கடைசி வணக்கங்கள்...

எனக்கு தெரியும்...
கண்டிப்பாக
இதை நீ ஏற்றுக்கொள்ள
மாட்டாய் என்று...

ஏனெனில்...
இலவசங்களுக்கு
விலை போன நான்...
எவ்வாறு
உங்கள் வீரமரணத்துக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்த முடியும்...

அளிக்கும் வாக்குக்கு
கூட லஞ்சம்
வாங்கும் நான்....
எவ்வாறு வாய் விட்டு
அழ முடியும்...

அந்நிய தேசத்தாளை
"அன்னை" என்று
அழைக்கும் நான்...
உன்னை என்
அண்ணனாக
நினைக்க மறந்து விட்டேனே...

என் "அன்னை"-இன்
ஒரு தாலிக்காக...
ஓராயிரம் லட்சம்
தாலிகளை அறுத்துவிட்ட
சிங்களத்தானை
சிரம் இறக்க
மறந்துவிட்டேனே...

தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
என்பார்கள்...
ஆனால்...
அண்ணா
நீ போர்க்களத்தில்
லட்சிய போர் செய்யும்
போது...
நான் இங்கு
IPL20 மட்டை
பந்து பார்த்து
கொண்டு அல்லவா
இருந்து விட்டேன்...
மட்டை பந்தில்
இந்தியா தோற்றால்
மானம் போய்விட்டதாக
சொல்லும் நான்...
உன்னொருவனின்
தலைமையில் நடத்தும்
உரிமை போராட்டம்...
சிங்கள ஓநாய்களால்
சிதிலம் செய்தப்போது
சீற மறந்து விட்டேனே...

இனிமேல்....
நான் பதங்கமாகும்
கற்பூரத்தில் மட்டும்....
பக்தியை
தேடி என்ன பயன்....

இரவின் பாலங்களில்
மட்டும்....
உறவினை
தேடி என்ன பயன்....
நான் இனி தமிழனும்
இல்லை...

உன் தம்பியாகும்
தகுதியும் இல்லை....
மெல்ல தமிழ்
இனி சாகும்....
தமிழனும் மெல்ல
இனி சாவான்....

பாறைகளைச்
சந்திக்காவிடில்
ஓடைகளுக்குச்
சங்கீதம் இல்லை.

No comments:

Post a Comment