Saturday 19 December 2009

Vettaikkaran Terror...

Friday 18 December 2009

Saturday 21 November 2009

பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி: ஜெயலலிதா

தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது மௌன வலியாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது புதுடெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய அலறல் வலியாக இருக்கும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை ஜெயலலிதா கடுமையாக தா‌க்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுத் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அ.இ.அ.தி.மு.க 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத்திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை. அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி.

உண்மை நிலை என்னவென்றால் 1976ஆம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வளவு வாய்கிழிய பேசும் கருணாநிதி, 2008ஆம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை இராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒரு வரிக் கூட தெரிவிக்கவில்லையே.

ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டுத் தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது, பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார். தன்னலம் காரணமாகத் தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்துவிட்டு, தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி. வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.

தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது மௌன வலியாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது புதுடெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய அலறல் வலியாக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.

இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமி‌ழினத்திற்குக் கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அ‌றி‌க்கை‌யி‌ல் ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அவரச முடிவால் ஏற்பட்ட விளைவுகள்: கருணாநிதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவரச முடிவால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணி அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்து அறிக்கை வருமாறு:

''ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் ‌‌தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சனைக்காக எழுப்பிய குரலும், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும், நடத்திய அறப்போராட்டங்களும், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும், ஏன், இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும்,

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும், "டெசோ'' இயக்கத்தின் சார்பில் நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4.5.1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும், அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும், ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்; அரசு பொறுப்பில் முதலமைச்சராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும், இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும், நடைபெற்றதற்கான காரணத்தையும், நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம்,

தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18.11.2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில், "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன்.

2003இல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார். 2005இல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் 2005இல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார்.

அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறிவிட்டார். ''என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்; டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்; பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்த்தனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Tamilnadu Politics and TV Channels...


ஒரு காலத்தில் கட்சி ஆரம்பித்தால் அதற்கென்று சில கொள்கைகள் இருக்கும். சில இலட்சியங்கள் இருக்கும். அந்த காலம் எல்லாம் தமிழ் நாட்டில் மலையேறிவிட்டது. இன்று ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவதற்கு கொள்கை, இலட்சியங்கள் போன்றவைகள் எதுவும் தேவை இல்லை. ஏன் தொண்டர்கள் கூட இரண்டாம் பட்சம் தான். கட்சி நடத்துவதற்கு இன்று TV Channelகள் ஒரு அத்த்யவசியத் தேவையாகி விட்டது. தன் கட்சிக்கான ஒரு TV Channel இல்லாவிட்டால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற ஒரு போக்கும், மனோபாவமும் ஏற்பட்டு விட்டது. Sun TV திமுகவின் தேர்தல் பிரசார media வாக சென்ற சட்ட மன்ற தேர்தலில் செயல்பட்டது. தேர்தல் முடிவிற்கு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது Sun TV யின் தேர்தல் பிரச்சாரம். இலவச TV, கேஸ் ஸ்டவ் மற்றும் திமுகவின் உடனடி தேர்தல் அறிக்கையையும் கிராமத்தின் நுனி வரை கொண்டு சென்றது. Sun TV க்கும் திமுக தலைமைக்கும் தகராறு வந்த போது பல்லாண்டுகள் பாரம்பரியமிக்க திமுக விற்கு TV Channel இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி கலைஞர் TV தொடங்க வேண்டியதாகி விட்டது. Jaya TV பற்றி கேட்கவே வேண்டாம். பெயர் ஒன்றே போதும். செல்வி ஜெயலலிதாவின் தினசரி அறிக்கை தான் என்றுமே உலகின் தலைப்பு செய்தி அவர்களுக்கு. தேர்தல் முடிவுகளின் போது கூட அதிமுக வென்றால் மட்டுமே Jaya TV இல் முடிவுகளை அறிவிப்பார்கள். இல்லையென்றால் தேர்தல் நடந்த சுவடு கூட இல்லாது போல் ஒரு திரை படத்தை ஒளிபரப்பிகொண்டு வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

தேசிய கட்சியான காங்கிரஸ் பிரமுகர்கள் (இதற்கு ஏது தமிழகத்தில் தலைமை) கூட TV Channel கள் ஆரம்பித்துள்ளார்கள். Mega TV, Vasanth TV நல்லவேளை கை TV, சோனியா டிவி எல்லாம் இல்லை. பாமக, மக்கள் TV என்று Channel ஆரம்பித்து பாமக செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

உலக அளவில் பொதுவாக TV Channels என்பது Entertainment, News, Lifestyle என்று பலவகை ஆக பிரிவு படுத்தி வைப்பார்கள். தமிழ் TV Channel எந்த விதத்தில் சேர்ப்பது? TV Channel லுக்கு என்று ஒரு புது குறிக்கோளை தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்கலாம். இந்த லட்சணத்தில் Captain TV என்று விஜயகாந்த் ஒரு Channel லை பொங்கல் அன்று ஆரம்பிக்க இருக்கிறார்.

Saturday 14 November 2009

China mobile வாங்க போறிங்களா?




உலகில் எந்த புதிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சீனாவில் அதே மாதிரி குறைந்த விலையில் china product செய்து விற்க ஆரம்பித்து விடுவார்கள். mobile phone களும் அதற்கு விதி விலக்கல்ல. Apple Iphone கூட china phone versionல் கிடைக்கிறது. அதுவும் மிக மிக குறைந்த விலைகளில். இதுபோன்ற mobileகள் வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில். ஏனென்றால் வரும் December முதல் முறையான IMEI இல்லாத mobile phoneகளை தடை செய்ய போகிறார்கள் ( இந்த தடை தற்போது ஏற்கனவே UKவில் இருக்கிறது) . சரியான IMEI இல்லாத mobile phone களை உபயோகிக்க முடியாது. IMEI என்றால் என்ன? International Mobile Equipment Identity என்பதன் சுருக்கமே IMEI. இது ஒவ்வொரு mobile phone க்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் தனி எண் ஆகும். ஒரு மொபைல் போனில் இருக்கும் IMEI வேறு மொபைல் போனில் இருக்காது. இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அது duplicated போன் ஆகும். சட்டப்படி தவறு. பொதுவாக china mobile களில் சரியான IMEI இருக்காது.


IMEI எப்படி கண்டு பிடிப்பது?
இது ரொம்ப easy. உங்க போனில் battery யை கழற்றி விட்டு பார்த்தால், மொபைல் போனில் பிரிண்ட் செய்ய பட்டிருக்கும். அல்லது உங்கள் மொபைல் போனில் *#06# என்று டைப் செய்தால் உங்கள் போனின் IMEI தெரியவரும்.

என் IMEI சரியானதா என்று எப்படி கண்டு பிடிப்பது?
ரொம்ப simple. www.numberingplans.com என்ற web site க்கு போகவும். அங்கே உங்கள் IMEI கொடுத்து check பண்ணினால் உங்கள் IMEI நம்பர் valid ஆனதா என்று தெரிந்து விடும்.

மொபைல் போன் வாங்கும் போது கவனமாக இருங்கள்.

Saturday 19 September 2009

கலைஞருக்கு அண்ணா விருது - ஏன்?


திமுக சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது முதல்வர் திரு கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எதாவது ஆச்சரியப்படவோ, பெருமை பட்டுக்கொள்ளவோ ஏதும் உள்ளதா? திமுகவை பொறுத்தவரை திமுக வேறு கலைஞர் வேறு என்பதே இல்லை. தனக்கு தானே ஒரு விருதை கொடுத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். திரு பேராசிரியர் அவர்கள் இதில் ஒரு மீடியம் மட்டுமே. கலைஞர் வேறு ஒருவரின் பெயரை (ஸ்டாலின், அழகிரி அல்லது கனிமொழி) பரிந்துரைத்தாலும் பேராசிரியர் மறுப்பேதும் சொல்லாமல் அதையும் அறிக்கையாக வெளியிடுவார். இந்த நிலையில் கலைஞருக்கு அண்ணா விருது ஏன் என்று தலைப்பிட்டு ஒரு கருத்தரங்கம் வேறு. ஏதோ ஐநா சபையில் இருந்து உயரிய விருது கொடுத்ததை போன்ற ஒரு effect டுடன். தலைப்பு பகுத்தறிவு கொள்கை (இந்து மத எதிர்ப்பு?), ஏழைகளுக்காக உழைப்பது (டிவி கொடுத்துள்ளாரே- கலைஞர் டிவி பார்க்க ), பேச்சாற்றல் (திருமதி ஜெயலலிதா என்று தான் அழைப்பேன் போன்ற பேச்சுகள்?), எழுத்தாற்றல் (உடன்பிறப்புக்கு கடிதம்?), கட்சியை கட்டுகோப்பாக வைத்திருத்தல் (குடும்பத்தில் எத்தனை பேரை அரியணையில் ஏற்றினாலும் கட்சியினர் யாரும் கேள்வி கேட்காதது?) மற்றும் அரசியல் நாகரிகம். (இதற்கு ஒரு example வேறு வேணுமா?) போன்றவை. இதற்கென்றே ஒரு நாலைந்து பேச்சாளர்கள் (ஜிங் ஜிங்) இருக்கிறார்களே. அவர்கள் தான் விருதுக்கான காரணத்தை அலசுகிறார்கள். ஒரு எளிய பாமரனுக்கு கூட புரியாதா இந்த விருதுக்கான காரணம்? திரு கலைஞர் அவர்களுக்கு இந்த ஜால்ராக்கள் எல்லாம் அலுக்கவே அலுக்காதா? எத்தனை வருஷமாக கேட்டுக்கொண்டு இருப்பார்?

I Just like this...


My Friend forwarded this picture to tease me... But still I like this picture.

Saturday 5 September 2009

Heart Attack


Heart Attack ஏன்?
Heart Attach ஏன் வருகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இதயத்தில் உள்ள artery என்னும் (குருதி புனல்?) ரத்தக் குழாயில் அதிக கொலஸ்ட்ரால் சேருவதால் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்போது heart attack வருகிறது. Artery சுருங்கி narrow ஆக ஆகும்போதும் heart attack வருகிறது.

எப்படி காப்பாற்றலாம்?
ஒருவர் heart attack ல் பாதிக்க படும்போது, டாக்டர்கள் அவருக்கு clot busting drugs அல்லது angioplasty என்னும் கருவி மூலம் artery ல் ஏற்பட்டுள்ள அடைப்பை திறந்து காப்பாற்றலாம். அனால் இதில் காலம் (time) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிது தாமதம் ஆனாலும் patient இறக்க நேரிடும்.

காரணம் என்ன?
புகை பிடித்தல்
பரம்பரை
உயர் ரத்த அழுத்தம்
அதிக கொலஸ்ட்ரால்
உடற்பயிற்சி இல்லாமை
சர்க்கரை வியாதி

போன்றவை Heart attack ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Sunday 16 August 2009

சுதந்திரமில்லா சுதந்திர தின கொண்டாட்டம்.


இன்று நாம் இந்தியாவின் 63 வது சுதந்திர ஆண்டின் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுதந்திரத்துக்கு பின்னால் எத்தனை உயிர்கள், எத்தனை இழப்புகள் மற்றும் எத்தனை போராட்டங்கள் என்று நமக்குத் தெரியும். இன்று இங்கிலாந்தில் சில இடங்களில் இந்திய தேசிய மூவர்ண கொடி பறப்பதை கண்டு கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. உள்ளம் சிலிர்க்கின்றது. இதனிடையே இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்கிறது? சுதந்திர தினம் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன்பே ராணுவமும், போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த படுகிறது.
Bus stand, Railway stations ஆகியவற்றில் மக்கள் சோதனை இடபடுகிறார்கள். நகருக்குள் நுழையும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப் படுகிறது. இவ்வளவு ஏன்? அருகில் உள்ள படங்களை பாருங்கள். 1947 சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்துக்கும், 2009 ல் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கும் உள்ள வித்தியாசத்தை. பிரதமர் கூட சுதந்திர தினம் கொண்டாட கூண்டுக்குள் அடைபட வேண்டியுள்ளது. இதுவா நாம் கேட்ட சுதந்திரம்?

Monday 10 August 2009

Saturday 20 June 2009

பிரபாகரன் மரணம் புலிகளால் ஒத்துக்கொள்ளப்பட்டது...

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள், மற்றும் சிறிலங்கா படைத்துறையின் உயர்பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும், அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும், அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.


இதேவேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத்துறையின் இயக்குநர் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இருவேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதேவேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும், அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள், தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆயிரம் மடங்கு நம்பகத் தகுந்த செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் என்ன பதில் சொல்ல போகிறது?

Tuesday 9 June 2009

தோல்வியிலும் அதிக வாக்குகள் பெற்று புதிய சாதனை


ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழரான ஜனனி ஜனநாயகம் தோல்வி அடைந்தார். இந்திய அரசியல்வாதிகள் பாணியில் சொன்னால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். ஜனனி வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களின் அவலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மூலமாக ஒலிக்கும், விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாங்கள் அனைவரும் அவர் வெற்றி பெறுவார் என்றே நம்பினோம்.


ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, எந்த ஒரு சுயேச்சை வேட்பாளரும் இவ்வளவு ஓட்டுக்கள் இதுவரை பெற்றதில்லை. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். ஜனனி ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருந்தால் MP ஆகி இருப்பார்.

லண்டன் பகுதியில் எட்டு எம்.பி இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

Jan பற்றிய சிறு தொகுப்பு கீழே உள்ளது....



Friday 5 June 2009

கப்பலேறி போயாச்சு...

Times of India நாளிதழ் நடத்திய sting ஆபரேஷன் மூலம் MBBS சீட்டுகளின் விற்பனை, மற்றும் சீட்டுகளின் விலை விபரம் தெரிய வந்துள்ளது. அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ள கல்வி தந்தைகளின் கல்லூரிகளையே சாட்சியாக காட்டியுள்ளனர். மிக பெருமையாக இருக்கிறது. அதில் ஒரு கல்வி தந்தையான ஜெகத் ரட்சகன் சற்று நாட்களுக்கு முன்னர் தான் மத்திய அமைச்சராகி இருக்கிறார் தமிழ் இன தலைவர்? திரு கருணாநிதி அவர்களின் தயவில். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளலாம். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்ற கதையாக, தனக்கும் அந்த கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுப்பு வேறு. அதற்கு ஆதாரமாக இருந்த கல்லூரியின் website டை நிறுத்தி விட்டார். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைத்ததாம். Medical Council of India வின் website டில் இன்னும் அவர் பெயர் இருக்கிறதே? http://www.mciindia.org/apps/search/view_college.asp?ID=279. இதை கூட அவர் அமைச்சர் என்ற செல்வாக்கை பயன் படுத்தி எடுத்து விடலாம். இன்னும் ஏன் விட்டு வைத்துள்ளார் என்று தெரியவில்லை. . தென் கொரிய நாட்டில் முன்னால் அதிபர் தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிவிட்டார்கள் என்று தற்கொலை செய்து கொண்டார். அதை மறுக்க கூட முடியாத கோழை போல அந்த தலைவர். ஒரே ஒரு முறை இந்திய அரசியல் வாதிகளிடம் ஒருநாள் workshop அட்டென்ட் பண்ணி அரசியல் கற்றிருக்கலாம். Google image search இல் 'Jegath Ratchagan' என்று டைப் செய்து தேடி பாருங்கள். பக்கத்தில் உள்ள ரஜினியின் இமேஜ் display ஆகிறது.

Tuesday 2 June 2009

Rare Photos of Shah Rukh and His Family




சர்க்கரை வியாதி ( Diabetes)



அவ்வப்போது medical article எழுதலாம் என்றிருக்கிறேன். எளிய தமிழில் எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் இன்று சர்க்கரை வியாதியை (diabetes) பற்றி பார்ப்போம்.

சர்க்கரை வியாதி என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் உள்ள sugar ஆனது செரிமானம் ஆகி சிறு சிறு பகுதியாக பிரிக்கபடுகிறது. இவை glucose எனப்படும். glucose, நமது ரத்தத்தின் செல்களில் புகுந்து நமது உடலுக்குத் தேவையான எரிசக்தியாக பயன்படுகிறது. உடலில் pancreas என்று ஒரு gland உள்ளது. இது insulin என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் ஹார்மோன், glucose நமது ரத்தத்தின் செல்களில் புகுவதற்கு உதவுகிறது. Pancreas நமது ரத்தத்தில் எவ்வளவு க்ளுகோஸ் உள்ளதோ அதற்கேற்றவாறு insulinனை சுரக்கிறது. இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது, glucose நமது ரத்தத்திலேயே சேர்ந்து விடுகிறது. இதுவே நமது ரத்தத்தில் sugar (glucose) அளவை உயர்த்தி diabetes வர காரணமாகும். இதன் காரணமாகவே நாம் செயற்கையாக இன்சுலினை injection வடிவில் உடலில் ஏற்றிக் கொள்கிறோம்.






சர்க்கரை வியாதிக்கு தீர்வு?

இந்த நிமிடம் வரை சர்க்கரை வியாதியை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. யாராவது மருந்து என்னிடம் இருக்கிறது வாருங்கள் என்று விளம்பர படுத்தினால் டுபாக்கூர் தான். இந்நேரம் அவருக்கு nobel பரிசு கொடுத்து இந்த உலகம் அவரை கவுரவ படுத்தி இருக்கும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் வியாதியை கட்டுபடுத்தலாம் அவ்வளவுதான்.



diabetes வராமல் எவ்வாறு தடுக்கலாம்?

1) இது பரம்பரையாகவும் வரலாம். நம் உணவு பழக்கத்தை கட்டுபடுத்துவதன் மூலமாகவும் diabetesசை தவிர்க்கலாம்.

2) regular ஆக excercise செய்ய வேண்டும்.

3) excercise செய்ய முடியாதவர்கள் daily atleast 30 நிமிடம் walking ஆவது செல்லவேண்டும்.

4) அடிக்கடி blood test செய்து sugar அளவை check செய்ய வேண்டும்.

Graphic Talents...

நெனச்சது ஒன்னு... நடந்தது ஒன்னு...

Sunday 31 May 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

'குமுதம்' இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

Thursday 28 May 2009

கோவையில் பைக் ஆம்புலன்ஸ்

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைவாக முதலுதவி வழங்கும் வகையில் அவசர பைக் ஆம்புலன்ஸ் சேவை முதன் முறையாக கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கே.ஜி. மருத்துவமனை சார்பில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த துவக்க விழாவில் அதன் தலைவர் ஜி.பக்தவத்சலம் தலைமையில் கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலி சேவையை துவக்கி வைத்தார்.

பக்தவத்சலம் கூறுகையில்,

சைரன் விளக்குடன்கூடிய இந்த பைக் ஆம்புலன்ஸ் நான்கு சக்கர வாகனங்களைப் போல் போக்குவரத்தில் சிக்காமல் விரைவாக செல்ல முடியும்.

மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவர் இந்த பைக் ஆம்புலன்சில் சென்று முதலுதவி செய்வார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த இழப்பை நிறுத்தி, செயற்கை பிராண வாயு செலுத்தும் வசதி இந்த பைக்கில் உள்ளது.

இந்த சேவை தேவைப்படுவோர் 155 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்

இலங்கைக்கு ஆதரவாக ஐநா சபையில் இந்தியா

இலங்கை படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த கோரிக்கைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த கோரிக்கை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் கோரிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இரோப்பிய நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் கோரிக்கைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த கோரிக்கை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த கோரிக்கைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் இலங்கையின் நிதியுதவி கோரும் கோரிக்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் இலங்கை முன்வைத்த கோரிக்கை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் இலங்கை அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

9 கலெக்டர்கள்-ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 கலெக்டர்கள் உள்பட பல பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழக நிர்வாக இயக்குநராக உள்ள தாயனந்த் கட்டாரியா இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

இதுவரை தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அதுல்ய மிஸ்ரா, போக்குவரத்து கழகச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரத சாஹூ விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் செயலாளராகவும், அந்தப் பொறுப்பில் இருந்து வந்த சுதீப் ஜெயின் ஊரக வளர்ச்சித்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநர் தியாகராஜன் மாற்றப்படுகிறார்.

பொதுத்துறை இணைச் செயலாளர் எம்.சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

அங்கு ஆட்சியராக இருந்த உதயசந்திரன் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ் குமார் பன்சல் மாற்றப்பட்டு வேளாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக உமாநாத்தும், இதுவரை அந்த பொறுப்பில் இருந்து வந்த பழனிகுமார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த.ஜெயராமன் திருநெல்வேலி ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன் தொழில்துறை துணைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணைச் செயலாளராக இருந்து வந்த ஷோபனா சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் கடலூர் ஆட்சியராகவும் மதுரை ஆட்சியராக மதிவாணனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday 27 May 2009

இலங்கை இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் சரண் அடைய முடிவு: கருணா புதிய தகவல்


விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.
இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.

2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை இலங்கை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

வென்றார்கள்... வாங்கினார்கள்...

அனைவரையும் சமாதான படுத்தியும் திருப்தி படுத்தியும் ஒரு வழியாக மத்திய அமைச்சர்களின் list தயாராகி விட்டது. திரு மன்மோகன் சிங்கும், திருமதி. சோனியா காந்தியும் நீண்ட விவாதத்திற்கு பின் இந்த நீண்ட listடை வெளியிட்டுள்ளார்கள். இடையே இடையே rest எடுத்துவிட்டு படிக்கவும்.

Cabinet அமைச்சர்கள்
1)பிரணாப் முகர்ஜி
2)சிதம்பரம்
3)A.K. ஆண்டனி
4)S.M. கிருஷ்ணா
5)சரத் பவார்
6)மம்தா பானர்ஜி
7)கமல் நாத்
8)குலாம் நபி ஆசாத்
9)கபில் சிபல்
10)சுஷில் குமார் ஷிண்டே
11)முரளி தியோரா
12)ஜெயபால் ரெட்டி
13)ஆனந்த் ஷர்மா
14)ஹண்டிக்
15)அம்பிகா சோனி
16)மெய்ரா குமார்
17)வயலார் ரவி
18)வீரப்ப மொய்லி
19)C.P ஜோஷி
20)வீரபத்திர சிங்
21)விலாஸ்ராவ் தேஷ்முக்
22)பாரூக் அப்துல்லா
23)தயாநிதி மாறன்
24)ராஜா
25)மல்லிகார்ஜுன் கார்கே
26)குமாரி செல்ஜா
27)சுபோத் கான்ட் சகாய்
28)M.S கில்
29)G.K வாசன்
30)பவன் குமார் பன்சால்
31)முகுல் வாஸ்னிக்
32)கண்டிலால் புரியா
33)M.K. அழகிரி

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
34)பிரபுல் படேல்
35)ப்ரித்விராஜ் சவான்
36)ஸ்ரீ பிரகாஷ் ஜைஸ்வல்
37)சல்மான் குர்ஷீட்
38)தின்ஷா படேல்
39)ஜெய்ராம் ரமேஷ்
40)கிருஷ்ணா திரத்

இணை அமைச்சர்கள்


41)E. அஹமத்
42)V. நாராயணசாமி
43)ஸ்ரீகாந்த் ஜென
44)முள்ளப்பல்லி ராமசந்திரன்
45)D. புரந்தேஸ்வரி
46)பனபகா லக்ஷ்மி
47)அஜய் மகேன்
48)K.H. முனியப்பா
49)நமோ நரைன் மீனா
50)ஜ்யோதி ரதித்ய சிந்தியா
51)ஜிதின் பிரசாத்
52)A. சாய் பிரதாப்
53)குருதாஸ் காமத்
54)M.M. பள்ளம் ராஜு
55)மகாதேவ் கண்டேலா
56)ஹரிஷ் ராவத்
57)K.V. தாமஸ்
58)ஸொவ்கத ரே
59)தினேஷ் திரிவேதி
60)சிசிர் அதிகரி
61)சுல்தான் அஹ்மத்
62)முகுல் ராய்
63)மோகன் ஜட்டுவ
64)S.S. பழனி மாணிக்கம்
65)D. நெபோலியன்
66)S. ஜகத்ரக்ஷகன்
67)S. காந்திசெல்வன்
68)ப்ரநீத் கூர்
69)சச்சின் பைலட்
70)ஷஷி தரூர்
71)பரத்சின் சோலங்கி
72)துஷார்பி சவதரி
75)அருண் யாதவ்
76)பிரதீக் பிரகாஷ்பாபு பட்டில்
77)R.P.N. சிங்
78)வின்சென்ட் பாலா
79)பிரதீப் ஜெயின்
80)அகதா சங்கமா

Monday 25 May 2009

வீரவணக்கங்கள்...

Email லில் ஒரு நண்பர் அனுப்பியது.

வேலுப்பிள்ளை
அவர்களின்
விடிவெள்ளி...
எங்கள்
அண்ணன்
பிரபாகரனே...

உன்னொருவனின்
வீர மரணத்துக்கும்...
உன்னோடு
சகலங்களிலும்
உடனிருந்து
உயிர்
துறந்த...
என்னுடைய
பச்சை
தமிழ்
ரத்தங்களே...


உங்களுக்கு
இந்த கையாலகாத
கடன்கார தமிழனின்
கடைசி வணக்கங்கள்...

எனக்கு தெரியும்...
கண்டிப்பாக
இதை நீ ஏற்றுக்கொள்ள
மாட்டாய் என்று...

ஏனெனில்...
இலவசங்களுக்கு
விலை போன நான்...
எவ்வாறு
உங்கள் வீரமரணத்துக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்த முடியும்...

அளிக்கும் வாக்குக்கு
கூட லஞ்சம்
வாங்கும் நான்....
எவ்வாறு வாய் விட்டு
அழ முடியும்...

அந்நிய தேசத்தாளை
"அன்னை" என்று
அழைக்கும் நான்...
உன்னை என்
அண்ணனாக
நினைக்க மறந்து விட்டேனே...

என் "அன்னை"-இன்
ஒரு தாலிக்காக...
ஓராயிரம் லட்சம்
தாலிகளை அறுத்துவிட்ட
சிங்களத்தானை
சிரம் இறக்க
மறந்துவிட்டேனே...

தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
என்பார்கள்...
ஆனால்...
அண்ணா
நீ போர்க்களத்தில்
லட்சிய போர் செய்யும்
போது...
நான் இங்கு
IPL20 மட்டை
பந்து பார்த்து
கொண்டு அல்லவா
இருந்து விட்டேன்...
மட்டை பந்தில்
இந்தியா தோற்றால்
மானம் போய்விட்டதாக
சொல்லும் நான்...
உன்னொருவனின்
தலைமையில் நடத்தும்
உரிமை போராட்டம்...
சிங்கள ஓநாய்களால்
சிதிலம் செய்தப்போது
சீற மறந்து விட்டேனே...

இனிமேல்....
நான் பதங்கமாகும்
கற்பூரத்தில் மட்டும்....
பக்தியை
தேடி என்ன பயன்....

இரவின் பாலங்களில்
மட்டும்....
உறவினை
தேடி என்ன பயன்....
நான் இனி தமிழனும்
இல்லை...

உன் தம்பியாகும்
தகுதியும் இல்லை....
மெல்ல தமிழ்
இனி சாகும்....
தமிழனும் மெல்ல
இனி சாவான்....

பாறைகளைச்
சந்திக்காவிடில்
ஓடைகளுக்குச்
சங்கீதம் இல்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் பேட்டியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Sunday 24 May 2009

அப்பாடா...


அப்பாடா... ஒரு வழியா தமிழ்நாட்டில் நிலவி வந்த மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்தது. மகன், மகள், பேரன் எல்லோருக்கும் பதவி கிடைச்சாச்சு. இந்த காங்கிரஸ்காரங்களுக்கு நம்ம பெருந்தன்மை தெரியமாட்டேங்குதே. நான் என்ன மகனுக்கு பிரதமர் பதவியா கேட்டேன்?

"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்": 'தினமணி' சாடல்


தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்து வேறுபாடு கொண்டு, அதை ஒருநாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, டில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.



பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரசிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரசுடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.

எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.



முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது.

ஆனால், மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி 'ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரசும் சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரசார் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.

தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், டில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!

உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட இராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?

இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.



திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, டில்லி அல்ல.

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 22 March 2009

IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு


IPL போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசும், சில மாநில அரசுகளும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மறுத்ததால், IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்சனை ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

IPL போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் மோகத்தை பயன்படுத்தி பணம் பண்ணுவதற்காக சில பணக்கார முதலாளி வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது. போட்டிகள் நடக்காமல் போனால் அவர்களுக்கு பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு ஏற்படும். அதனால் அண்ணன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன... எனக்கு திண்ணை காலியாக வேணும் என்னும் கதையாக, வெளிநாட்டில் நடத்தியாவது டிவி ஒளிபரப்பு மூலம் பணத்தை அள்ளிவிட தீர்மானித்திருக்கிறார்கள். அருகில் உள்ள படத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியாவின் ஏழை மக்கள். IPL நடக்காவிட்டால் இவர்கள் அடுத்த வேளை உணவிற்கே திண்டாடுபவர்கள்.