Monday 22 December 2008

அஇசமக வின் துணை தலைவர்...


அஇசமக வின் துணை தலைவராக திருமதி ராதிகா சரத்குமார் பதவி ஏற்றுகொண்டார். நெல்லையில் தலைவர் சரத்குமார் இதை அறிவித்தார். மேலும் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தெரிவித்தார் திரு சரத்குமார். அஇசமக என்றால் ஏதோ ராடன் நிறுவனம் போல் ஒரு corporate கம்பெனி என்று நினைத்து விடாதிர்கள். ஏனென்றால் பொதுவாக கணவர் ஆரம்பித்த ஒரு நிறுவனத்தில் மனைவியும் ஒரு தலைமை பொறுப்பை ஏற்றுகொள்வது ஒரு வழக்கம் தான். அதுமாதிரி இல்லை இது. இதில் ஒரு சிறு வித்தியாசம்உள்ளது. இதற்கென்று கொடி எல்லாம் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படியானால் இது ஒரு அரசியல் கட்சியாகத் தான் இருக்கும். ஆனால் இதை அறிவிக்க சரத்குமார் குடும்பத்தோடு திருநெல்வேலி வரை வருவானேன்? சென்னையில் வீட்டிலே அறிவித்து இருக்கலாம். கணவரும் மனைவியும் ஒரே வீட்டில் தானே இருக்கிறார்கள்.

Wednesday 17 December 2008

உருப்படியான காரியம்...

மத்திய அரசு நேற்று (16 -Dec -08) உருப்படியாக இரண்டு காரியங்களை செய்துள்ளது. NIA என்னும் National Investigation Agency என்னும் புலனாய்வு நிறுவனம் அமைக்கும் மசோதாவையும், Unlawful Activities (Prevention) என்னும் சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு துணை போவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். இனியாவது தீவிரவாதம் கட்டுபடுத்தப் படுகிறதா என்று பார்க்கவேண்டும். ஆனால் இந்த சட்டம் தவறாகவும், அரசியல் எதிரிகளை பழிவாங்கவும் உபயோகிக்காமல் நேர்மையாக செயல் படுத்த பட வேண்டும். இது மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கையில் தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday 6 December 2008

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு...

மத்திய அரசு ஒரு வழியாக மக்கள் மீது பரிதாபம் காட்டியுள்ளது. (காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது) பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயும், டீசல் விலையில் இரண்டு ரூபாயும் குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தற்போது முறையே சராசரியாக ஐம்பது மற்றும் முப்பத்தி இரண்டு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு கீழே கண்டவைகள் கூட காரணங்களாக இருக்கலாம்...

1) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 44 டாலருக்கும் குறைவாக இறங்கியும் மத்திய அரசு பெட்ரோல் விலை பற்றி கவலைபடாமல் இருந்ததால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி.
2) மும்பை தாக்குதலில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பலாம்.
3) விலைவாசி உயர்வை பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளும் எதிர் கட்சிகளின் வாயை அடைக்கலாம்.
4) எல்லாவற்றிகும் மேலாக மக்களவை தேர்தல் மிக அருகில் நெருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சரி... பெட்ரோல், டீசல் விலையை குறித்த மத்திய அரசுக்கு ஒரு சபாஷ்... மற்றும் நன்றி...

Friday 5 December 2008

மும்பையில் இது தான் நடந்ததாம்...

ஒரு பாகிஸ்தான் சேனலில் இரண்டு அறிவாளிகள் அமர்ந்து அலசி ஆராய்ந்து மும்பையில் உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.


http://www.youtube.com/watch?v=I7np3nWK8_c


பாகிஸ்தானில் Experts சே இந்த அறிவோடு இருந்தால் அங்கே இருக்கும் பாமர மக்களின் அறிவு நிலை என்னவாக இருக்கும்?

உண்மையில் சூரியன் மிக குளுமையானது. அது பகலில் தெரிவதால் தான் வெப்பமானது போல் தெரிகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து சொல்லிஇருக்கிறார்கள்.

Sunday 30 November 2008

அப்பாடா.....!

Atlast திரு சிவ்ராஜ் பட்டில் ராஜினாமா செய்துள்ளார். நாம் அனைவரும் அவருக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டும். ஒரு வழியாக அவருக்கு இந்திய மக்களின் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால் இதில் மேலும் மேலும் சிக்கலையே ஏற்படுத்தி உள்ளனர். உள்துறையை சிவராஜ் பட்டில் அவர்களிடமிருந்து எடுத்து, திரு ப. சிதம்பரம் அவர்களிடம் கொடுத்துள்ளார்கள். இதைவிட ஒரு கொடுமை என்னவென்று சொல்வது? ஏற்கனவே, சிதம்பரம் அவர்கள் finance துறையில் பணியாற்றி முழுமையாக மக்களின் நம்பிக்கையை இழந்தவர். அவரிடம் மீண்டும் ஒரு மிக முக்கியமான மற்றும் தற்போது மிக அவசியமாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய துறையான உள்துறையை கொடுத்திருப்பது சரிதானா? (இவர் share market மிக உச்சத்தில் இருந்தபோது தன் துறை வாரியான நடவடிக்கை தான் காரணம் என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டார். share market கீழே விழுந்த பொது அதற்கு காரணம் உலக பொருளாதார வீழ்ச்சி என்று ஒதுங்கிகொண்டவர், என்னே ஒரு பொறுப்புணர்ச்சி) மேலும் மிகுந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் finance துறையை மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். செய்வன திருந்த செய் என்று ஒரு பழமொழி உண்டு. இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லயோ?

Friday 28 November 2008

இந்தியத்தாய் காயப்பட்டு குற்றுயிராய் இருக்கிறாள்...

கீழே உள்ள கடிதத்தை படியுங்கள். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் Macaulay என்பவர் இந்தியாவைப் பற்றி எழுதியவை.


ஆனால் இன்று...?

இன்று நம் இந்திய தாய் இருக்கும் நிலைமையை கண்டு கண்ணீர் விடாத இந்திய இதயம் இருக்க முடியாது. இந்தியாவில் தீவிரவாதத்தை யார் வேண்டுமானாலும் நிகழ்த்திவிட்டு எந்த கவலையுமின்றி சுகமாக வாழலாம் என்ற நிலை தான் உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக மிக மென்மையாகவும், நளினமாகவும் சட்டங்களை வைத்துக்கொண்டிருக்கும் ஒரே தேசம் இந்தியாவாத்தான் இருக்க முடியும். இதை மறுத்தால் கண்டிப்பாக சொல்லிவிடலாம் நீங்கள் ஒரு ஆளும் கட்சியின் அரசியல்வாதி அல்லது அனுதாபி என்று. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு உங்கள் மனசாட்சியை மட்டும் முன்னிறுத்தி யோசித்து பாருங்கள். இந்தியத் தாய் எவ்வளவு காயமுற்ற நிலையில் இருக்கிறாள் என்று புரியும். இன்னும் எத்தனை இந்திய சகோதர்கள் இறந்தால்... இந்தியாவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று உங்களுக்கு நீங்களே புகழாரம் சூட்டிகொள்வதையும், உண்மையை மறைப்பதையும் நிறுத்தி... நிதர்சனத்தை ஏற்று கொள்வீர்கள்? மும்பையின் நிகழ்வுக்கு பிறகாவது ஒத்துக் கொள்வீர்களா இந்திய அரசின் தோல்வியை? நமது பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் உள்ளிட்டு யாருக்கேனும் இப்பவாவது மனம் இருக்கிறதா அரசின் இயலாமையை ஒத்துக் கொள்ள? தீவரவாதத்தை ஒழிப்பார்களாம்... ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை இல்லையாம்... இப்போது இருக்கும் சட்டங்களே போதுமாம்... அதை வைத்து தீவரவாதத்தை ஒழித்து விட்டீர்களா? அப்படியானால் மும்பை ரயில் நிலையத்திலும், ஹோட்டல் களிலும் நடந்தது என்ன Hide and Seek விளையாட்டா?













நீங்கள் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தருவீர்கள் என்று தானே அய்யா உங்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்தோம். இப்படி சப்பை கட்டு கட்டுவதற்கா?




இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்கள் வோட்டு வங்கியை திட்டமிடுவீர்கள்?


மும்பையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து காக்க எத்தனை வீரர்கள் தங்கள் இன்னுயிரை தந்து தியாகம் செய்துள்ளனர். பாவம் அவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் தியாகத்திற்கு நீங்கள் தரும் மதிப்பு என்னவென்று. எப்படியும் இந்த சதி செயலுக்கு மூளையாக ஒரு அப்சல் குரு இருப்பான். பல தியாக வீரர்கள் உயிர் தியாகம் செய்து அவனை பிடித்து உங்கள் கையில் தருவார்கள். நீங்கள் அவனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்து பராமரித்துக்கொள்வீர்கள். கோர்ட்டில் தீர்ப்பளித்து தண்டனை உறுதி செய்தாலும் ஏதும் ஆகப்போவதில்லை. ராஜமரியாதையுடன் சீரும் சிறப்புமாக பார்த்துகொள்வீர்கள். இதை அறியாத இந்த அப்பாவி கமாண்டோ படை வீரர்கள் தீவிரவாதிகளை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். கமாண்டோ படை வீரர்களே... தயவு செய்து அவர்களை உயிரோடு பிடித்து விடாதிர்கள்... இந்த அரசியல்வாதிகள் அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். பின் ஒரு நாள் வேறொரு கூட்டம் அப்பாவி மக்களை பினையக்கைதியாக பிடித்துக்கொண்டு இவர்களை விடுவிக்க கேட்பார்கள். இந்த அரசியல் கோமான்கள் மக்களை காப்பதற்காக இவர்களை விடுவிக்கிறோம் என்று வியாக்கியானம் பேசிக்கொண்டு பத்திரமாக அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் தான் உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறோம்... ஒரு தீவிரவாதியை கூட உயிருடன் பிடித்து விடாதிர்கள். அங்கேயே சுட்டுகொன்று விடுங்கள் அந்த இரக்க மற்ற மிருகங்களை. இதுதான் இந்த அபலை இந்திய தாயின் மக்களின் வேண்டுகோள்.

அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது. இனியும் தாமதித்தால் இந்தியத் தாய் மரணத்தை தான் தழுவாள். நம் தாயை காப்பாற்ற சில அவசர அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும்.


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அரசியல்வாதிகளான அமைச்சர்களின் கையில் இருக்க கூடாது. உள்நாட்டு மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கையில் இருக்க வேண்டும். ஒரு அதிகாரியின் தலைமையில் புதிய துறையை உருவாக்கவேண்டும். அனைத்து மாநில போலீஸ் துறையும் இதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். இதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி கண்டிப்பாக குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். அரசியல் சாயம் இல்லாதவராக இருக்க வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கவும் கூடாது... இருந்திருக்கவும் கூடாது. ( இல்லையெனில் governer பதவிக்கு ஏற்பட்ட கதி தான் இதற்கும் ஏற்படும். கட்சியில் உள்ள அதிருப்தியாளரை திருப்தி படுத்துவதற்கு அவருக்கு governer பதவி தரக்கூடிய அளவுக்கு governer பதவியின் தரம் தாழ்ந்து விட்டது. ) அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப் படவேண்டும். ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த பதவியை வகிக்க முடியும் என்று ஆக்க வேண்டும். பதவி நியமனம் ஜனாதிபதியாலும், முப்படை தளபதிளாலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவரை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கக் கூடாது.

அரசியல்வாதிகள், அமைச்சர்கள் யாருக்கும் இந்த துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கக் கூடாது. இந்த துறையின் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்பட வேண்டும். போலீஸ் மற்றும் எல்லை படை நியமனம் இந்த துறை மூலமே நடை பெற வேண்டும். போலீஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த இந்த துறைக்கு மட்டுமே அதிகாரம் வழங்க வேண்டும். (இல்லையெனில் வட்டச் செயலாளருக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் பயப்பட வேண்டியிருக்கிறது).

தீவிரவாதத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்தவருக்கு 60 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கபடவேண்டும். அன்றோ அல்லது மறுநாளோ தீர்ப்பு நிறைவேற்றபடவேண்டும். தீர்ப்பு தூக்கு தண்டனையா அல்லது விடுதலையா என்று இருக்க வேண்டும். யார் மீதாவது போலி வழக்கு பதிவு செய்ததாக தெரிந்தால், வழக்கு பதிவு செய்த அதிகாரியை இந்த சட்டத்தின் கீழேயே டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் இருக்க வேண்டும். போலி வழக்கு புகார் ஒரு மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.


லஞ்ச ஒழிப்புத்துறை நீக்கப்படவேண்டும். அதற்கு பதிலாக லஞ்ச ஒழிப்பு நீதி மன்றங்களை ஏற்படுத்த வேண்டும். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை செய்யும் பொறி வைத்து பிடிக்கும் முறைகளை இந்நீதிமன்றங்கள் செய்யவேண்டும். பிடிபடுபவர்களுக்கு நீதி மன்றம் உடனடியாக தீர்ப்புகளை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இதில் மேல்முறையீடு இருக்க கூடாது. ஏனென்றால் நீதி மன்றம் நேரடியாக தலையீட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒருவரை பிடித்து பின் நீதி மன்றத்தில் நிருபிக்க வேண்டிய அவசியமும், கால விரயமும் இல்லை. லஞ்சப் பேர்வழிகளைப் பற்றிய புகார்களை பொதுமக்கள் இந்நீதி மன்றகளிலேயே முறையிடலாம்.
இந்நீதி மன்ற ஊழியர் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டால், தண்டனையை இரட்டிப்பாக்க வேண்டும்.


Photo நன்றி AP

Thursday 27 November 2008

மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்...



மும்பை நகரில் நேற்று (26-Nov-08) இரவு தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கி சூடு நடத்தியதில் எண்பது பேர் கொல்லப்பட்டனர் மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பையின் luxury ஹோட்டல்கள் ஆன oberai, taj போன்ற இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இந்த தாக்குதல் மேலை நாட்டவரை குறிவைத்து நடத்தியதாக தெரிகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு டெக்கான் முஜாகிதின் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.




மீண்டும் திரு சிவராஜ் பட்டில் அவர்கள் மைக் குவியலின் நடுவே நின்று பேட்டி என்ற பெயரிலே ஒரு சொற்பொழிவாற்ற போகிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒரு போதும் மத்திய காங்கிரஸ் அரசு ஏற்று கொள்ளாது. உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் இதற்கு காரணமானவர்களை கைது செய்வோம். ஆனால் POTA போன்ற கொடிய சட்டங்களை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.


அட போங்கயா நீங்களும் உங்க அரசியலும்.....
Photo நன்றி : yahoo

Wednesday 26 November 2008

கலைஞரின் அதிரடி பல்டி...

பாமகவுடன் தகராறு ஏதும் இல்லை. விலகியதாக சொல்வதெல்லாம் தவறு. அப்படி கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் நாகரிகமற்றவர்களும் இல்லை. நாங்கள் எங்கள் வருத்தத்தை சொன்னோம், அவர்கள், தங்களது நிலைமையை விளக்கினர் என்று கலைஞர் அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அப்பாவி மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு மதிப்பிட்டு வைத்துள்ளனர் இந்த தமிழக அரசியல்வாதிகள்.

ஒரு sample க்கு கீழே உள்ள பகுதியை படியுங்கள்.

17-Jun-08 அன்று நடந்த திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் கலைஞரின் பேச்சு... (கலைஞரையும், ஆர்காட்டாரையும் பற்றி காடுவெட்டி குரு பேசிய பேச்சின் CD பற்றிய விவாதத்திற்கு பிறகு)

இழிவாக, தரக்குறைவாக, தன்மான உறவைப் பறிக்கும் வகையில் கேவப்படுத்தப்பட்டாலும், அத்தகைய ஒருகட்சி தலைமை அப்படி இழிவுபடுத்தியவர்களை, பேசியவர்களை தட்டிக்கேட்காமலும், அவர் மீது அந்தக் கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பேசியது தவறு, இத்தகைய கேவலமான வார்த்தைகளை பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்போ, வருத்தமோ கேட்காத நிலையிலும் கூட, அப்படி கேவலப்படுத்திகிறவர்களோடு, உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்பதை ஏற்க இயலாத காரணத்தால், அவர்களை இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனியும் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கிறது

( இவை கூட்டணி முறிவு இல்லையா... இது பாமகவுடனான கூட்டணி பற்றி புகழ்ந்து பேசியதா?)

அன்று பாமக கூட்டணியை விட்டு போனால் என்ன? காங்கிரஸ் இருக்கிறது, கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் போன்ற நிலை இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. கம்யூனிஸ்ட்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் பார்லிமென்ட் தேர்தல் வேறு நெருங்குகிறது. அதன் பின் காங்கிரசுக்கு திமுகவின் தயவு தேவை படுமோ படாதோ... ஆனால் மாநிலத்தில் அவர்களின் தயவால் தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது... இதையெல்லாம் எதிர் பார்த்திருந்தால் அன்று திமுகவின் உயர் நிலை குழு கூட்டமே கூடி இருக்காதே...

அன்று காடுவெட்டி குரு பேசிய பேச்சுகள் அனைத்தும் இன்று புகழ்ச்சியாக மாறிவிட்டதா? இந்த அரசியல்வாதிகள் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சினிமாவில் பார்த்து இருக்கிறோம். இன்று அதை நேரிலும் பார்க்கிறோம். சினிமாகாரர்களை குறை கூறும்போதெல்லாம் அவர்கள் சொல்வார்கள், நிஜத்தில் நடப்பதைத் தானே படமாக எடுக்கிறோம் என்று. உண்மைதானுங்கோ... ஒத்துக்குறோம்...

Tuesday 25 November 2008

தெரியுமா உங்களுக்கு...!


1) உலகில் உள்ள அனைத்து கண்டங்களின் பெயர்களும் (ஆங்கிலத்தில்) ஆரம்பிக்கும் எழுத்திலேயே முடியும்.
2) நம் உடலில் வலுவான தசை நாக்கு தான்.
3)ஒரு பெண், ஆணைவிட இரண்டு மடங்கு அதிகம் இமைக்கிறாள்.
4) உலகில் அதிகம் புழக்கத்தில் உள்ள பெயர் Mohamed.
5)ஒரு மனிதனால் தன் மூச்சை தானே தன் கையால் அடைத்துக்கொண்டு சாக முடியாது.
6)உங்கள் முழங்கையை (elbow) உங்கள் நாக்கை வைத்து தொட முடியாது.
7)பன்றியால் வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது.
8)111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
9)குதிரை வீரன் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் தூக்கிக் கொண்டிருந்தால், அந்த சிலையில் உள்ள வீரன் போர்க்களத்தில் இறந்ததாக கொள்ளலாம். குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால் போரின் காயம் காரணமாக இறந்திருப்பான். முன்னிரு கால்களும் தரையில் ஊன்றி இருந்தால் அவன் இயற்கை மரணம் எய்தியவன்.
10) கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள் - தேன்.
11) யானையால் குதிக்க முடியாது.
12)தீப்பெட்டி கண்டுபிடிக்கும் முன்னரே சிகரட் லைட்டெர் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.
13) இந்த துணுக்குகளை படித்தவர்களில் 99% பேர் தன் நாக்கால் தன் elbow வை தொட முயற்சித்து இருப்பார்கள்.

Sunday 23 November 2008

கலைஞரின் குடும்ப அரசியல் பற்றி விமர்சிக்க விஜயகாந்த்துக்கு தகுதி இருக்கிறதா?


திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தேமுதிக என்று திரு. விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முழங்கி கொண்டு வருகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் வரவேற்க கூடியது. ஆனால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பல்வேறு எண்ணங்கள் மக்களுக்கு உதிக்கிறது. தேமுதிக கட்சி ஆரம்பித்தவுடன் நமக்கு ஒரு அண்ணியாரும், ஒரு தளபதியும் கிடைத்திருக்கிறார்கள் என்பதை தவிர வேறு ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கலைஞர் தன் குடும்ப சொத்தாக திமுகவை மாற்றி கொண்டார். அவரும் அவர் குடும்பத்தாரும் வேண்டுமானால் இதை மறுத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மையை நாம் அனைவரும் அறிவோம். தமிழகத்தை இரண்டு பகுதிகளாக ஒவ்வொரு மகனுக்கும் பிரித்து கொடுத்து விட்டார். மேலும் அடுத்த தலைவர் யார் என்பதிலும் சண்டை வழுத்துக்கொண்டே போகிறது. திமுகவில் இதுதான் தற்போதைய நிலை. தேமுதிகவில் கேப்டன் எங்கு சென்றாலும் அண்ணியாரின் கட் அவுட் மற்றும் போஸ்டர் எங்கெங்கு காணினும் வியாபித்துள்ளது.
மேலும் அண்ணியாரின் தம்பி, கேப்டனின் மச்சினனும் ஆனா சுதீஷ் போஸ்டர் களும் எங்கும் வியாபித்துள்ளது. ஏதோ இவர்களை விட்டால் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேறு நாதி இல்லாதது போல் நினைக்கிறார்கள். இந்த அம்மணி இந்த நாட்டுக்காக என்ன செய்து விட்டார்? ஒரு நடிகரின் மனைவி என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. நடிப்பு என்பது ஒரு தொழில். மற்ற தொழில்களில் கிடைக்கும் popularity யை விட இதில் கிடைக்கும் popularity அதிகம். அதை தவறாக எடுத்துக்கொண்டும், அதையே ஒரு தகுதியாகவும் நினைத்துக்கொண்டும் பதவிக்கு தன் குடும்பம் மொத்தத்தையும் இழுத்துக்கொண்டு வருவது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தற்போது கலைஞர் செய்து கொண்டிருப்பதையே வேறு நபர்களை வைத்து செய்வதற்கு இன்னொருவர் எதற்கு? Known devil is better than unknown devil.இதற்கு தற்போது இருக்கும் திமுகவே போதுமே? எதற்கு புதியதாக ஒரு தேமுதிக?. ஆக தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இதுதான் போலிருக்கு. இப்படி ஒவ்வொரு தலைவரது குடும்பத்தையும் வாழ வைத்துக்கொண்டு தான் இன்னும் எங்கே இருக்கிறோம், தன்னிலை என்ன என்பதையே உணராமல் கைதட்டிக்கொண்டு இருக்கும் வரை இதுபோன்ற தலைவர்கள் தோன்றிக்கொண்டே தான் இருப்பார்கள். திரு விஜயகாந்த் அவர்கள் கலைஞரை பற்றி குறை கூறும் முன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கலைஞரை குறை கூறும் தார் மிக உரிமையை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

Photo நன்றி : தினமலர்

விடுதலை புலிகளிடம் பணம் பெற்றார் பிரபல நடிகர் - சுப்ரமணியன் சுவாமி.


விடுதலை புலிகளிடம் பணம் பெற்ற பிரபல நடிகரின் பெயரை தக்க ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவேன் என்று Dr.சுப்ரமணியன் சுவாமி வழக்கம் போல் தெரிவித்துள்ளார். இவருக்கு மதுரை மக்கள் வாய்ப்பு கொடுத்த போதே, மக்களின் பிரச்சனையை பற்றி கவனிக்காமல் மத்திய அரசை கலைப்பதிலும், கூட்டணியை உடைப்பதிலும் மும்முரமாக இருந்தார். மதுரையை singapore ஆக மாற்றுவேன் என்றல்லாம் உதார் விட்டுக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இன்று என்னிடம் ஆதாரங்கள் CD யில் இருக்கிறது, DVD யில் இருக்கிறது என்று அறிக்கை விட்டு அரசியலில் நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது தெரிவித்துகொள்கிறார். ஆதாரங்கள் இருந்தால் மக்களிடம்மும், மீடியாவிடமும் வெளியிட வேண்டியது தானே? இதுக்கு என்ன தக்க நேரம் வேண்டியது கெடக்கு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?

எதிர்காலத்தில் அணு குண்டுகளை வீசுவார்கள் பயங்கரவாதிகள்... - சிவராஜ் பட்டில்

எதிர்காலத்தில் அணு குண்டு, ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயங்கரவாதிகள் வீசும் அபாயம் உள்ளது. அதனால் மாநில அரசுகள் உஷாராக இருக்கவேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், பயங்கரவாதிகளை ஒடுக்க தனிப்படை அமைக்க வேண்டும். POTA போன்ற கொடிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் தெரிவித்துள்ளார்.


மக்கள் அணுகுண்டால் செத்தால் கூட பரவாயில்லை. ஆனால் BJP ஆதரிக்கும் POTA சட்டத்தை காங்கிரஸ் அரசு ஆதரிக்கவே செய்யாது. எங்களுக்கு தேவை வோட்டு ஒண்ணுதான். என்ன patil சார்?

Saturday 22 November 2008

கலைஞர் அவர்களின் கேள்வி பதில்


கேள்வி: சட்டக் கல்லூரி கலவரம் வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் போதாது என்றும், பதவியில் இருக்கிற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்தறிவித்து இருக்கிறார்களே?

கலைஞர்: மேற்கு வங்காள அரசு, நந்திகிராம நிகழ்ச்சியில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் பதினான்கு பேர் என்று அந்த மாநில சட்டமன்றத்திலேயே அரசின் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதே; அதற்கும், சுப்ரீம் கோர்ட்டில் பதவியிலிருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்திட முன் வருமா? அதைப் போலவே சிங்கூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் 18-12-2006 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தெமாலிக் மற்றும் கதித்தத்தா ஆகியோர் விவசாய நிலத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தைச் சேர்ந்த தபசி மாலிக் என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்து பதவியிலே உள்ள நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்திட தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பரிந்துரை செய்ய முன்வருவார்களா? அப்படி நடைபெற்றால் அதைப் பாராட்டிவிட்டு - அதன் பிறகு தமிழகத்திலே அவர்களின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.

எது எதுக்கோ இந்த கழக அரசு, முன்மாதிரி அரசு அப்படின்னு சொல்லிக்கிறீங்களே ஐயா... இந்த விசயத்துல மட்டும் ஏன் மற்றவர்கள் முன்மாதிரியா இருக்கட்டும்னு பின்னாடி போறீங்க? இதுக்கு ஏன் நீங்களே முன்னுதாரணமா இருக்ககூடாது?